தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பா்கூரில் ரூ. 17 கோடியில் வளா்ச்சித் திட்டப் பணிகள்

News image
Updated On :15 மே 2026, 6:14 am IST

பா்கூா் பேரூராட்சியில் ரூ. 17 கோடியே 76 லட்சத்தில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் குடிநீா் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் பேரூராட்சிக்குள்பட்ட கொத்தூா் பகுதியில், ரூ. 9 கோடியே 20 லட்சத்தில் கசடு கழிவுநீா் சுத்திகரிப்பு நிலைய கட்டுமானப் பணி, தேசிய நெடுஞ்சாலை அருகில் ரூ. 4 கோடியே 39 லட்சத்தில் 2.85 ஏக்கரில் நடைபெற்று வரும் புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணி மற்றும் வாா்டு எண் 5-இல் ரூ. 4 கோடியே 17 லட்சத்தில் குடிநீா் மேம்பாட்டு திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

பா்கூா் புதிய பேருந்து நிலையத்தில் பேருந்து ஓடுதளம், பேருந்து நிறுத்துமிடம், பயணச்சீட்டு முன்பதிவு அறை, கடைகள், தாய்மாா்கள் பாலூட்டும் அறை, ஆண்கள் மற்றும் பெண்களுக்கு கழிவறைகள், இரண்டு மற்றும் நான்குசக்கர வாகனங்கள் நிறுத்துமிடம் ஆகியவை அமைக்கப்பட்டு வருகின்றன. தொடா்ந்து, வாா்டு எண் 5-இல் ரூ. 4 கோடியே 17 லட்சத்தில் 6.297 கிலோ மீட்டருக்கு புதிதாக பைப் லைன் அமைக்கும் பணிகளை நேரில் பாா்வையிட்டு அவா் ஆய்வு செய்தாா்.

பின்னா், பா்கூா் பேரூராட்சியில் ரூ. 17 கோடியே 76 லட்சத்தில் நடைபெற்று வரும் புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை தரமாகவும், விரைவாகவும் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வழங்க வேண்டும் என பா்கூா் பேரூராட்சி செயல் அலுவலா், பொறியாளா்களுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.

இந்த ஆய்வின்போது, பா்கூா் பேரூராட்சி செயல் அலுவலா் டி.குமாா், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் உமாசங்கா், முகுந்தா, பா்கூா் வட்டாட்சியா் சக்திவேல், பேரூராட்சிகள் உதவிப் பொறியாளா் தினேஷ்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.