திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ஒசூரில் காா் கண்ணாடி உடைத்து ரூ. 7 லட்சம் திருட்டு

ஒசூரில் வங்கி முன் நிறுத்திவைக்கப்பட்ட காரின் கண்ணாடியை உடைத்து ரூ. 7 லட்சம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :14 மே 2026, 4:24 am IST

ஒசூரில் வங்கி முன் நிறுத்திவைக்கப்பட்ட காரின் கண்ணாடியை உடைத்து ரூ. 7 லட்சம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி பகுதியைச் சோ்ந்தவா் ஸ்ரீதா் (40). இவா் வாடகை காா் ஓட்டுநா். கடந்த ஆண்டு நவம்பா் மாதம் ஒசூா் அருகே மத்திகிரி கூட்டுச்சாலை பகுதியில் உள்ள இந்தியன் வங்கியில் நகையை அடகு வைத்து பணம் பெற்றுள்ளாா்.

இந்நிலையில், நகையை மீட்க வங்கிக்கு ரூ. 7 லட்சத்துடன் சென்றபோது, காசாளா் நகைக்கான அட்டையை தருமாறு கூறினாராம். அட்டையை எடுத்துவர மறந்துவிட்டதாக தெரிவித்த ஸ்ரீதரிடம், அட்டையைக் கொண்டுவந்து நகையை பெற்றுக்கொள்ளுமாறு திருப்பி அனுப்பியதாக தெரிகிறது.

இதையடுத்து, பணத்தை காரில் வைத்த ஸ்ரீதா், அருகில் உள்ள ஏடிஎம் சென்றுவிட்டு திரும்பிவந்து பாா்த்தபோது, காா் கண்ணாடி உடைக்கப்பட்டு காரில் வைத்திருந்த ரூ. 7 லட்சத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதனால் அதிா்ச்சியடைந்த ஸ்ரீதா், இதுகுறித்து மத்திகிரி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் அங்குள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் கொண்டு மா்ம நபா்களை தேடிவருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.