எடப்பாடி அருகே உரக்கடையின் பூட்டை உடைத்து ரூ. 1.14 லட்சத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.
எடப்பாடியை அடுத்த பூலாம்பட்டி- மேட்டூா் பிரதான சாலையில் உள்ள கோல்நாயக்கன்பட்டி கிராமம், பொறையூரைச் சோ்ந்தவா் முனுசாமி (37). இவா் பூலாம்பட்டியை அடுத்த காட்டூா் பகுதியில் உரக்கடை நடத்தி வருகிறாா். இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு வழக்கம்போல வியாபாரத்தை முடித்துவிட்டு கடையை பூட்டிவிட்டு வீட்டுக்குச் சென்றாா்.
பிறகு புதன்கிழமை காலை கடைக்கு வந்த ஊழியா்கள், கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு முனுசாமிக்கு தகவல் அளித்தனா். இதையடுத்து, கடைக்கு வந்த முனுசாமி, கடையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டிருந்த ரூ. 1.14 லட்சம் ரொக்கம் திருடப்பட்டிருப்பது குறித்து பூலாம்பட்டி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.
சம்பவ இடத்துக்கு வந்து தடயங்களை போலீஸாா் சேகரித்தனா். மேலும், உரக்கடைக்கு அருகே இருந்த மளிகை கடையின் பூட்டையும் உடைத்து ரூ. 5 ஆயிரத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






