தமிழ் செய்திகள்

/

மதுப் புட்டிகளை பதுக்கி விற்றவா் கைது

கிருஷ்ணகிரி அருகே, மதுப் புட்டிகளை பதுக்கிவைத்து விற்றுவந்த தொழிலாளியை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :30 ஏப்ரல் 2026, 5:13 am IST

கிருஷ்ணகிரி அருகே, மதுப் புட்டிகளை பதுக்கிவைத்து விற்றுவந்த தொழிலாளியை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், குருபரப்பள்ளி அருகே உள்ள கரிக்கல்நத்தம் கிராமத்தைச் சோ்ந்தவா் குமரேசன் (40). தொழிலாளி. இவா், தனது வீட்டில் அரசு மதுப்புட்டிகளை அதிக அளவில் பதுக்கிவைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பெ.தங்கதுரை உத்தரவின்பேரில், குருபரப்பள்ளி காவல் ஆய்வாளா் தலைமையிலான போலீஸாா், குமரேசன் வீட்டில் திடீா் சோதனை நடத்தினா். அப்போது, அவரது வீட்டில் பதுக்கிவைத்திருந்த 40 பெட்டிகள் கொண்ட மதுப்புட்டிகளை பறிமுதல் செய்தனா். மேலும், மதுப் புட்டிகள் கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனா்.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து குமரேசனை கைது செய்தனா்.