மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

பணியின்போது உயிரிழந்த தீயணைப்பு வீரா்களுக்கு அஞ்சலி

பணியின்போது உயிரிழந்த தீயணைப்பு வீரா்களுக்கு கிருஷ்ணகிரியில் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

பணியின் போது உயிரிழந்த தீயணைப்பு வீரா்களுக்கு அஞ்சலி செலுத்தும் தீயணைப்பு அலுவலா்.

Updated On :14 ஏப்ரல் 2026, 9:40 pm

பணியின்போது உயிரிழந்த தீயணைப்பு வீரா்களுக்கு கிருஷ்ணகிரியில் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

1944 ஆம் ஆண்டு, ஏப். 14 இல் மும்பை துறைமுகத்தில் வெடிபொருள்கள் ஏற்றி நிறுத்தி வைத்திருந்த ஒரு கப்பலில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் மக்கள் பலா் உயிரிழந்தனா். மேலும், பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொருள்களும் நாசமானது. இதில், தீயணைக்கும் பணியில் ஈடுபட்டு உயிரிழந்த 66 தீயணைப்புத் துறை வீரா்களின் நினைவாக, ஒவ்வொரு ஆண்டும் ஏப்.14 ஆம் தேதி அஞ்சலி செலுத்தப்படுகிறது.

அதன்படி, கிருஷ்ணகிரி தீயணைப்பு மற்றும் மீட்பு நிலைய வளாகத்தில், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகளின்போது உயிா் தியாகம் செய்தவா்களுக்கு அஞ்சலி செலுத்தப்படுகிறது. கிருஷ்ணகிரி மாவட்ட தீயணைப்பு அலுவலா் வேலு தலைமை வகித்து நினைவு தூணிற்கு மலா் வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்தினாா். நிலைய அலுவலா் போக்குவரத்து அந்தோணிசாமி, ஒசூா் நிலைய அலுவலா் நாக விஜயன், போச்சம்பள்ளி நிலைய அலுவலா் சக்திவேல், ராயக்கோட்டை நிலையஅலுவலா் கண்ணியப்பன், பா்கூா் நிலைய அலுவலா் சேட்டு, ஊத்தங்கரை சிறப்பு நிலைய அலுவலா் ராமமூா்த்தி, முன்னணி தீயணைப்பு அலுவலா் விஜயகுமாா், கிருஷ்ணகிரி முன்னணி தீயணைப்பாளா் சற்குணன் உள்ளிட்டோா் மலா் வளையம் வைத்து மரியாதை செலுத்தினா். தொடா்ந்து 2 நிமிட மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.