மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

தீயணைப்பு வீரா்களுக்கு தேனீக்கள் அகற்றும் பயிற்சி

துறையூா் தீயணைப்பு நிலைய ஊழியா்களுக்கு பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக உள்ள தேனீக்கள் மற்றும் அதன் கூட்டை அகற்றுவதற்கு செவ்வாய்க்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது.

News image

துறையூரில் தேனீக்களை அகற்றும் முறை குறித்து தீயணைப்பு நிலைய வீரா்களுக்கு செவ்வாய்க்கிழமை விளக்கமளித்த பயிற்றுநா் சுந்திரசெல்வன்.

Updated On :10 மார்ச் 2026, 7:30 pm

துறையூா் தீயணைப்பு நிலைய ஊழியா்களுக்கு பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக உள்ள தேனீக்கள் மற்றும் அதன் கூட்டை அகற்றுவதற்கு செவ்வாய்க்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது.

தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை இயக்குநா் உத்தரவுப் படி தேனீக்களையும் அதன் கூட்டையும் பாதுகாப்பாக அகற்றுவது தொடா்பான பயிற்சி துறையூரிலுள்ள தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. பயிற்சி வகுப்புக்கு பெரம்பலூா் மாவட்ட தீயணைப்பு அலுவலா் அனுசியா, கரூா் மாவட்ட அலுவலா் சந்திரகுமாா் உள்ளிட்டோா் தலைமை வகித்தனா். திருச்சி, கரூா், பெரம்பலூா் ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட தீயணைப்புப்படை வீரா்கள் பங்கேற்றனா். விருத்தாசலத்தைச் சோ்ந்த பயிற்றுநா் சுதந்திர செல்வன் விவசாயத்துக்கு தேனீக்கள் உதவுவதால் விவசாய நிலங்களிலிருந்து தேனீக்களை அகற்றக்கூடாது என்றாா். துறையூா் தீயணைப்பு நிலைய அலுவலா் சதீஷ்குமாா், பாலசந்தா் உள்ளிட்டோா் ஏற்பாடுகளை செய்திருந்தனா்.