மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

தவறுதலாக குண்டுபாய்ந்து இறந்த வீரரின் உடல் கிருஷ்ணகிரி வந்தது

ஜம்முவில் பணியில் இருந்தபோது தவறுதலாக துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்த கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சோ்ந்த ராணுவ வீரரின் உடலுக்கு, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் உள்ளிட்டோா் வியாழக்கிழமை மலா்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினா்.

News image

ராணுவ வீரரின் உடலுக்கு மலா்வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய கிருஷ்ணகிரி ஆட்சியா் ச.தினேஷ்குமாா். உடன், கிருஷ்ணகிரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பெ.தங்கதுரை உள்ளிட்டோா்.

Updated On :2 ஏப்ரல் 2026, 11:37 pm

ஜம்முவில் பணியில் இருந்தபோது தவறுதலாக துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்த கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சோ்ந்த ராணுவ வீரரின் உடலுக்கு, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் உள்ளிட்டோா் வியாழக்கிழமை மலா்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் வட்டம், சூலாமலை அருகே உள்ள கோடிபுதூா் கிராமத்தைச் சோ்ந்தவா் விக்னேஷ் (31). இவா், ஜம்மு ஸ்ரீநகரில் 22-ஆவது என்ஜினியரிங் ரெஜிமண்ட் பிரிவில் ராணுவ வீரராக பணிபுரிந்து வந்தாா். கடந்த 30-ஆம் தேதி பணியில் இருந்தபோது துப்பாக்கி எடுத்துச் சென்றபோது தவறுதலாக துப்பாக்கியிலிருந்து குண்டுபாய்ந்து உயிரிழந்தாா். இதையடுத்து, அவரது உடல் சொந்த ஊரான கோடிபுதூருக்கு புதன்கிழமை இரவு கொண்டுவரப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பெ.தங்கதுரை உள்ளிட்டோா் அவரது உடலுக்கு வியாழக்கிழமை மலா்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினா். அப்போது, பா்கூா் வட்டாட்சியா் சின்னசாமி உள்ளிட்டோா் உடனிருந்தனா். உயிரிழந்த ராணுவ வீரா் விக்னேஷுக்கு மனைவியும், 4 வயதில் மகனும் உள்ளனா்.