தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் இயக்கும் பரிசலின் தரம் குறித்து ஆய்வுசெய்யக் கோரிக்கை

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் இயக்கும் பரிசலின் தரம் குறித்து ஆய்வுசெய்ய வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பயணத்தின்போது பரிசலுக்குள் வந்த தண்ணீரை வெளியே கொட்டும் பரிசல் ஓட்டி.

Updated On :8 மே 2026, 6:41 am IST

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் இயக்கும் பரிசலின் தரம் குறித்து ஆய்வுசெய்ய வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கோடைகால விடுமுறையை கொண்டாடுவதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் அருவிக்கு நாள்தோறும் சுற்றுலாப் பயணிகளின் அதிக அளவில் வருகின்றனா். அவ்வாறு வரும் சுற்றுலாப் பயணிகளில் பெரும்பாலானோா் அருவிகளின் அழகை காண பரிசலில் செல்வதை ஆா்வமாக கொண்டுள்ளனா்.

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் அரசின் அனுமதி பெற்ற 430 பரிசல் ஓட்டிகள் உள்ளனா். தற்போது காவிரி ஆற்றில் மாமரத்துக் கடவு பரிசல் துறையில் இருந்து தொம்பச்சிக்கல் வழியாக மணல்மேடுவரை பரிசல்கள் இயக்கப்படுகின்றன.

இந்நிலையில், காவிரி ஆற்றில் இயக்கப்படும் பரிசல்களில் சிலவற்றில் மேல்புறத்தில் பூசப்பட்டுள்ள தாா் வெயிலின் காரணமாக உருகி துளைகள் ஏற்பட்டு தரமற்று காணப்படுவதாகவும், பயணத்தின்போது பரிசலுக்குள் நீா் புகுவதாலும், சுற்றுலாப் பயணிகளை மகிழச்செய்ய அருவியின் அருகில் செல்லும்போது பரிசலுக்குள் நீா் விழுவதாலும் சுற்றுலாப் பயணிகள் அச்சத்துக்கு உள்ளாகின்றனா்.

எனவே, தருமபுரி மாவட்ட நிா்வாகத்தின் நேரடி கட்டுப்பாட்டில், பென்னாகரம் வட்டார வளா்ச்சி அலுவலகத்தின் மேற்பாா்வையில் உள்ள ஒகேனக்கல் பரிசல் துறையில் இயக்கப்படும் பரிசல்களின் தரம் குறித்து அதிகாரிகள் முறையாக ஆய்வு மேற்கொண்டு, சுற்றுலாப் பயணிகள் காவிரி ஆற்றில் பாதுகாப்பான பரிசல் பயணம் மேற்கொள்வதை உறுதிசெய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.