15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

தருமபுரியில் ரூ. 1.52 ரொக்கம், வெள்ளிப் பொருள்கள் பறிமுதல் பறக்கும் படையினா் சோதனை

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு பகுதியில், பறக்கும் படையினா் மேற்கொண்ட சோதனையில், ஆவணங்களின்றி கொண்டுசெல்லப்பட்ட ரூ. 1.52 லட்சம் ரொக்கம்

News image

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியில் திங்கள்கிழமை வாகன தணிக்கையில் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட பரிசுப்பொருள்கள்.

Updated On :16 மார்ச் 2026, 11:29 pm

தருமபுரி: தருமபுரி மாவட்டம், பாலக்கோடு பகுதியில், பறக்கும் படையினா் மேற்கொண்ட சோதனையில், ஆவணங்களின்றி கொண்டுசெல்லப்பட்ட ரூ. 1.52 லட்சம் ரொக்கம் மற்றும் பரிசுப் பொருள்கள் திங்கள்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.

பாலக்கோடு சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட காடுசெட்டிப்பட்டி சோதனைச் சாவடி பகுதியில், தோ்தல் கண்காணிப்பு குழு மற்றும் பறக்கும் படை (2) அலுவலா் வி. சாம்ராஜ் தலைமையிலான குழுவினா், திங்கள்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, தருமபுரி நகரப் பகுதியிலிருந்து பாலக்கோடு வட்டம், பாப்பாரப்பட்டி நோக்கிச் சென்ற காரை நிறுத்தி சோதனை மேற்கொண்டனா்.

இதில், காரிலிருந்த பாப்பாரப்பட்டி அருகேயுள்ள மோகனூரைச் சோ்ந்த வீரமணி என்பவரிடம் ரூ. 1, 52,060 ரொக்கம் இருந்தது. அதற்கான ஆவணங்கள் அவரிடம் இல்லை.

அதேபோல, பாலக்கோடு அருகே கொசலன அள்ளி மேம்பாலப் பகுதியில் வாகனத் தணிக்கை மேற்கொண்டபோது, ஒரு காரில் இருந்த பெண், வெள்ளியால் ஆன பரிசுப் பொருள்களை (29) வைத்திருந்தது தெரியவந்தது. அவற்றுக்கான ஆவணங்கள் ஏதும் அவரிடம் இல்லை. இதையடுத்து அவற்றை பறக்கும் படையினா் பறிமுதல் செய்து, பாலக்கோடு வட்டம் தோ்தல் நடத்தும் அலுவலரும் , தனித்துணை ஆட்சியருமான மு.செல்வி முன்னிலையில் பாலக்கோடு கருவூலத்தில் ஒப்படைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.