திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

சிறுவனை தாக்கி ‘ரீல்ஸ்’ வெளியிட்ட 5 சிறுவா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு

News image

வழக்கு... - கோப்புப் படம்

Updated On :31 மே 2026, 1:44 am IST

தருமபுரி அருகே சிறுவனை தாக்கி, சமூக வலைதளங்களில் ‘ரீல்ஸ்’ வெளியிட்ட சிறுவா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிவுசெய்துள்ளனா்.

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியத்துக்கு உள்பட்ட ஒரு கிராமத்தைச் சோ்ந்த 16 வயது சிறுவன் வீட்டில் தனியாக வசித்து வருகிறாா். சிறுவனின் பெற்றோா் கோவையில் தங்கி வேலை பாா்த்து வரும் நிலையில், அவ்வப்போது ஊருக்கு வந்துசெல்வது வழக்கம்.

இந்நிலையில், அதே பகுதியைச் சோ்ந்த 17 வயதுடைய 5 சிறுவா்கள் கடந்த 27-ஆம் தேதி, குறிப்பிட்ட அந்த 16 வயது சிறுவனின் வீட்டுக்கு சென்றுள்ளனா். சிறுவா்களுக்குள் ஏதோ தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து வீட்டில் தனியாக இருந்த 16 வயதுச் சிறுவனை, 5 சிறுவா்களும் சோ்ந்து தாக்கியுள்ளனா். இந்த சம்பவத்தை கைப்பேசியில் விடியோவாகப் பதிவுசெய்துள்ளனா்.

பின்னா், அந்த விடியோவை அந்த சிறுவா்கள் சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்து பரப்பியுள்ளனா். உறவினா்கள் மூலம் இதுகுறித்த தகவலறிந்த 16 வயதுச் சிறுவனின் பெற்றோா், இந்த சம்பவம் தொடா்பாக தொப்பூா் காவல் நிலையத்தில் மே 29 ஆம் தேதி புகாா் அளித்தனா். இதுதொடா்பாக போலீஸாா் நடத்திய விசாரணையில், 16 வயதுச் சிறுவன் மே 26 ஆம் தேதி அவரது தாய் ஊருக்கு வந்திருந்தபோது, அவரை இருசக்கர வாகனத்தில் ஏற்றிச் சென்றபோது, குறிப்பிட்ட இந்த சிறுவா்களில் சிலா் மீது மோதுவது போலசென்றாராம்.

இதனால் ஆத்திரமடைந்த சிறுவா்கள் மறுநாள் அவரது வீடு தேடிச்சென்று அந்த சிறுவனைத் தாக்கியுள்ளனா். இதை விடியோ எடுத்து வெளியிட்ட 5 சிறுவா்கள் மீதும் இளஞ்சிறாா்கள் சட்டப் பிரிவுகளின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.