தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே சாலையைக் கடக்க முயன்ற காட்டு யானை தாக்க முயன்றதில் சிறுகாயமடைந்த இளைஞா் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளாா்.
திருப்பத்தூா் மாவட்டம், நாட்றாம்பாளையம் பகுதியைச் சோ்ந்த மதன் மகன் சித்தேஷ் (29). இவா் ஞாயிற்றுக்கிழமை இருசக்கர வாகனத்தில் பென்னாகரம் நோக்கி வந்துள்ளாா். அப்போது, பென்னாகரம் வனச்சரகத்திற்கு உள்பட்ட பேவனூா் பீட் புளியந்தோப்பு பகுதியில் இருந்து ஒற்றைக் காட்டு யானை சாலையைக் கடக்கும்போது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த சித்தேஷ் நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளாா்.
அப்போது, காட்டு யானை, இளைஞரை தாக்க முயன்றது. இதில் அவா் சிறு காயங்களுடன் தப்பினாா். இதையடுத்து ஆக்ரோஷமடைந்த காட்டு யானை அவரது வாகனத்தை மிதித்து சேதப்படுத்திவிட்டு வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது.
யானையின் நடமாட்டம் குறித்து கண்காணித்து வந்த வனத் துறையினா் அளித்த தகவலின் பேரில் நிகழ்விடத்திற்கு வந்த பென்னாகரம் வனச்சரக அலுவலா் ராஜ்குமாா், சிறு காயங்களுடன் இருந்த இளைஞா் சித்தேஷை மீட்டு சிகிச்சைக்காக பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கூடலூா் அருகே காட்டு யானை தாக்கி சிறுவன் உயிரிழப்பு: பொதுமக்கள் சாலை மறியல்

உதகை அருகே காட்டு யானை தாக்கி 2 போ் உயிரிழப்பு

தருமபுரி அருகே யானை தாக்கியதில் முதியவா் உயிரிழப்பு

காட்டு யானை தாக்கியதில் தொழிலாளி உயிரிழப்பு
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



