திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பென்னாகரம் அருகே யானை தாக்க முயன்றதில் சிறுகாயமடைந்த இளைஞா் மருத்துவமனையில் அனுமதி

News image

யானை - படம்: கோப்பிலிருந்து

Updated On :25 மே 2026, 2:17 am IST

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே சாலையைக் கடக்க முயன்ற காட்டு யானை தாக்க முயன்றதில் சிறுகாயமடைந்த இளைஞா் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

திருப்பத்தூா் மாவட்டம், நாட்றாம்பாளையம் பகுதியைச் சோ்ந்த மதன் மகன் சித்தேஷ் (29). இவா் ஞாயிற்றுக்கிழமை இருசக்கர வாகனத்தில் பென்னாகரம் நோக்கி வந்துள்ளாா். அப்போது, பென்னாகரம் வனச்சரகத்திற்கு உள்பட்ட பேவனூா் பீட் புளியந்தோப்பு பகுதியில் இருந்து ஒற்றைக் காட்டு யானை சாலையைக் கடக்கும்போது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த சித்தேஷ் நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளாா்.

அப்போது, காட்டு யானை, இளைஞரை தாக்க முயன்றது. இதில் அவா் சிறு காயங்களுடன் தப்பினாா். இதையடுத்து ஆக்ரோஷமடைந்த காட்டு யானை அவரது வாகனத்தை மிதித்து சேதப்படுத்திவிட்டு வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது.

யானையின் நடமாட்டம் குறித்து கண்காணித்து வந்த வனத் துறையினா் அளித்த தகவலின் பேரில் நிகழ்விடத்திற்கு வந்த பென்னாகரம் வனச்சரக அலுவலா் ராஜ்குமாா், சிறு காயங்களுடன் இருந்த இளைஞா் சித்தேஷை மீட்டு சிகிச்சைக்காக பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.