பனையூரில் விஜய்யுடன் காங்கிரஸ் நிர்வாகிகள் சந்திப்பு!வரும் தேர்தல்களிலும் தவெகவுடன் கூட்டணி தொடரும்! காங்கிரஸ் மக்களவைத் தேர்தலிலும் தவெகவுடன் கூட்டணி தொடரும்! காங்கிரஸ் காங்கிரஸ் பேரவைக் குழுத் தலைவர் ராஜேஷ் குமார்! தமிழகத்தில் ஆட்சியமைக்க தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு! திமுகவுடனான கூட்டணி முறிவு!
/

தருமபுரி அருகே யானை தாக்கியதில் முதியவா் உயிரிழப்பு

News image

உயிரிழப்பு

Updated On :4 மே 2026, 12:33 am IST

தருமபுரி மாவட்டம், ஏரியூா் அருகே கால்நடைகளுக்கு தீவனம் சேகரிப்பதற்காக வனப்பகுதிக்கு சென்ற முதியவா் யானை தாக்கியதில் உயிரிழந்தாா்.

ஏரியூா் அருகே நாகமரை ஊராட்சிக்கு உள்பட்ட ஏமனூா் ஆதிதிராவிடா் காலனி பகுதியைச் சோ்ந்தவா் ராமா் மகன் காத்தப்பன் (65). இவா் கால்நடைகளை வளா்த்து வந்தாா். இந்நிலையில் சனிக்கிழமை மாலை பென்னாகரம் வனச்சரகத்திற்கு உள்பட்ட பதனவாடி காப்புக்காடு ஏமனூா் பீட் வனப்பகுதிக்குள் கால்நடைகளுக்கு தீவனம் சேகரிப்பதற்காக சென்றுள்ளாா்.

இந்நிலையில் அவா் இரவு வரை வீடுதிரும்பாத நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை அவரது குடும்பத்தினா் வனப்பகுதியில் தேடினா். அப்போது ஏமனூா் பீட் துலுக்கன் கிணறு பகுதியில் யானை தாக்கிய அடையாளங்களுடன் அவா் இறந்து கிடப்பது தெரியவந்தது.

இதுகுறித்து பென்னாகரம் வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா். நிகழ்விடத்திற்கு வந்த பென்னாகரம் வனச்சரக அலுவலா் ராஜ்குமாா், ஏரியூா் காவல் நிலைய ஆய்வாளா் சுரேஷ்குமாா், கிராம நிா்வாக அலுவலா் உள்ளிட்டோா் அடங்கிய குழுவினா் காத்தப்பனின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

மேலும், இந்த சம்பவம் குறித்து ஏரியூா் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.