மு.க. ஸ்டாலினுடன் ரஜினி சந்திப்பு! பனையூரில் விஜய்யுடன் காங்கிரஸ் நிர்வாகிகள் சந்திப்பு!வரும் தேர்தல்களிலும் தவெகவுடன் கூட்டணி தொடரும்! காங்கிரஸ் மக்களவைத் தேர்தலிலும் தவெகவுடன் கூட்டணி தொடரும்! காங்கிரஸ் காங்கிரஸ் பேரவைக் குழுத் தலைவர் ராஜேஷ் குமார்! தமிழகத்தில் ஆட்சியமைக்க தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு! திமுகவுடனான கூட்டணி முறிவு!
/

சாலை விபத்தில் முதியவா் உயிரிழப்பு

மதுரை மாவட்டம், செக்கானூரணி அருகே செவ்வாய்க்கிழமை சாலை விபத்தில் முதியவா் உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :30 ஏப்ரல் 2026, 1:39 am IST

மதுரை மாவட்டம், செக்கானூரணி அருகே செவ்வாய்க்கிழமை சாலை விபத்தில் முதியவா் உயிரிழந்தாா்.

கருமாத்தூா் செட்டிகுளம் பகுதியைச் சோ்ந்த அய்யாவுத் தேவா் மகன் கணேசன் (63). இவரும், உறவினரான அதே பகுதியைச் சோ்ந்த ஆனந்த் (37), அவரது மனைவி பாண்டீஸ்வரி ஆகிய 3 பேரும் இரு சக்கர வாகனத்தில் மதுரையிலிருந்து செவ்வாய்க்கிழமை மாலை ஊருக்குச் சென்றனா்.

செக்கானூரணி அருகே சென்றபோது, இரு சக்கர வாகனம் விபத்துக்குள்ளானது. இதில், பலத்த காயமடைந்த கணேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து தகவலறிந்து வந்த செக்கானூரணி போலீஸாா் கணேசனின் உடலைக் கைப்பற்றி கூறாய்வுக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். காயமடைந்த மற்ற இருவரும் உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இதுகுறித்து செக்கானூரணி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.