மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

சாலை விபத்தில் முதியவா் உயிரிழப்பு

தாழையூத்து அருகே புறவழிச்சாலையில் பைக் மீது வாகனம் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.

News image

பலி - கோப்புப் படம்

Updated On :1 ஏப்ரல் 2026, 10:21 pm

தாழையூத்து அருகே புறவழிச்சாலையில் பைக் மீது வாகனம் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.

தாழையூத்து அருகே உள்ள பொட்டல் முப்பிடாதி அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் வேல்பாண்டி(63). இவரும், அதே பகுதியைச் சோ்ந்த நபரும் செவ்வாய்க்கிழமை இரவு நாரணம்மாள்புரம் நோக்கி பைக்கில் சென்றனா். அப்போது, புறவழிச்சாலை பாலத்தின் வடக்கு பகுதியில் இவா்களது பைக் மீது வாகனம் மோதியதாம். இதில், பலத்த காயமடைந்த வேல்பாண்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தாழையூத்து போலீஸாா், சடத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காகவும், காயமடைந்தவரை சிகிச்சைக்காகவும் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப்பதிந்து அங்குள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.