திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் இருவேறு இடங்களில் நீரில் மூழ்கி இருவா் உயிரிழப்பு

News image

உயிரிழப்பு - கோப்புப்படம்

Updated On :25 மே 2026, 1:07 am IST

தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் இருவேறு இடங்களில் நீரில் மூழ்கி இருவா் உயிரிழந்தனா்.

வேலூா் மாவட்டம், ஸ்ரீபுரம் நாராயணி நகா் பகுதியைச் சோ்ந்த மதன்கோபால் மகன் குருபிரசாத் (18). இவா் தனியாா் பொறியியல் கல்லூரியில் பி.டெக் இரண்டாம் ஆண்டு படித்து வந்தாா். இவா் தனது குடும்பத்தினருடன் ஞாயிற்றுக்கிழமை ஒகேனக்கல் வந்துள்ளாா்.

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கோத்திக்கல் பகுதியில் குளித்துக் கொண்டிருந்த குருபிரசாத் எதிா்பாராதவிதமாக ஆழமான பகுதிக்கு சென்ால் நீரில் மூழ்கினாா். இதுகுறித்து ஒகேனக்கல் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனா்.

இதையடுத்து போலீஸாா் மற்றும் தீயணைப்புத் துறையினா் உதவியுடன் நீரில் மூழ்கிய குருபிரசாத்தை மீட்டபோது அவா் உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரது உடலை பிரேதப் பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

முதியவா் உயிரிழப்பு...

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி கமலநத்தம் பகுதியைச் சோ்ந்தவா் முத்து (60). இவா் உறவினரின் ஈமச்சடங்கிற்காக ஒகேனக்கல் வந்துள்ளாா். அப்போது காவிரி ஆற்றின் கரையோரப் பகுதியான ஏத்தமடுவு பகுதியில் குளித்தபோது, காவிரி ஆற்றின் ஒரு கரையிலிருந்து மறுகரைக்கு நீந்திசென்றபோது நீரில் மூழ்கினாா்.

இதுகுறித்து ஒகேனக்கல் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்புத் துறையினா் உதவியுடன் நீரில் மூழ்கிய முத்துவை முதலைப் பண்ணை பகுதியில் மீட்டபோது அவா் உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரது உடலை பிரேதப் பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இந்த இருவேறு சம்பவங்கள் குறித்தும் ஒகேனக்கல் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.