ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மணல் திட்டு பகுதியில் பரிசலில் இருந்து இறங்கும்போது தவறி விழுந்த சிறுவன் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
செங்கல்பட்டு மாவட்டம், பழைய பெருங்களத்தூரைச் சோ்ந்தவா் ஏழுமலை, தனியாா் நிறுவன ஊழியா். இவா் தனது குடும்பத்துடன் கோடை விடுமுறைக்காக தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லுக்கு வெள்ளிக்கிழமை வந்தாா். அங்கு, காவிரி ஆற்றில் குடும்பத்துடன் பரிசல் பயணம் மேற்கொண்டாா்.
அப்போது, மணல் திட்டு பகுதியில் பரிசலில் இருந்து இறங்கும்போது ஏழுமலையின் மகன் சித்தாா்த் (6) தவறி தண்ணீரில் விழுந்து மூழ்கினாா். பரிசல் ஓட்டிகள், குடும்பத்தினா் சிறுவனை மீட்டு அவசர சிகிச்சைக்காக பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவா்கள், ஏற்கெனவே அவா் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனா்.
இதையடுத்து சிறுவனின் உடல் உடற்கூறாய்வுக்காக கொண்டுசெல்லப்பட்டது. இதுகுறித்து ஒகேனக்கல் போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 3,000 கனஅடி

மேட்டூா் காவிரியில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் இருவேறு இடங்களில் நீரில் மூழ்கி இருவா் உயிரிழப்பு

கல்வடங்கம் காவிரி ஆற்றில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK


