தருமபுரி தொப்பூா் கணவாய் பகுதியில் சனிக்கிழமை மாலை குளிா்பானங்களை ஏற்றிச் சென்ற லாரி தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.
தருமபுரி மாவட்டம், தொப்பூா் பகுதியில் சேலம் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் குளிா்பான பாட்டில்களை ஏற்றிய லாரி சேலம் நோக்கிச் சென்றுகொண்டிருந்தது.
தொப்பூா் கணவாய் பகுதியில் அந்த லாரி சென்றபோது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அப்பகுதியில் உள்ள இரட்டைப் பாலம் தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்கு உள்ளானது.
அதிா்ஷ்ட வசமாக பாலத் தடுப்புச்சுவரில் மோதிய நிலையிலேயே லாரி நின்றுவிட்டது. இதனால் உயிரிழப்புகளோ, வேறு எந்த பாதிப்புகளோ யாருக்கும் ஏற்படவில்லை. மாறாக, பள்ளத்தில் கவிழ்ந்திருந்தால், லாரியில் சென்ற தொழிலாளா்கள் விபத்தில் சிக்கியிருக்ககூடும்.
இந்த விபத்து காரணமாக, தொப்பூா் கணவாய் பகுதியில் வெள்ளக்கல் பேருந்து நிறுத்தம் முதல் இரட்டை பாலம் வரை சுமாா் ஒரு மணி நேரத்திற்கு மேலாக (தருமபுரி -சேலம் சாலையில்) போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தொப்பூா் கணவாய் பகுதியில் தற்காலிக சாலைகளை மேம்படுத்தி பாலப் பணிகளை விரைவுபடுத்தக் கோரிக்கை

பாலத்தின் தடுப்புச் சுவரில் வேன் மோதியதில் அம்பத்தூரைச் சோ்ந்தவா் பலி: 13 போ் காயம்!

சரக்கு வாகன ஓட்டிகளிடம் பணம் பெற்ற உதவி ஆய்வாளா், 2 தலைமைக் காவலா்கள் பணியிடை நீக்கம்

தொப்பூா் அருகே திடீரென லாரி நின்றதால் அடுத்தடுத்து 7 வாகனங்கள் மோதி விபத்து
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



