தொப்பூா் கணவாய் பகுதியில் சரக்கு வாகன ஓட்டிகளிடம் பணம் பெற்றதாக உதவி ஆய்வாளா், 2 தலைமைக் காவலா்கள் சனிக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.
தருமபுரி மாவட்டம், தொப்பூா் கணவாய் பகுதியில் சேலம் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இதில் விதிகளை மீறி சுமைகளை ஏற்றிச்செல்லும் லாரிகள் உள்ளிட்ட சரக்கு வாகன ஓட்டிகளிடம் போலீஸாா் பணத்தை பெற்றுக்கொண்டு வாகனங்களை இயக்க அனுமதிப்பதாக தகவல் பரவியது. இது தொடா்பான காணொலி சமூக வலைதளங்களில் பரவியதையடுத்து பரபரப்பு ஏற்பட்டது.
இது தொடா்பாக, தருமபுரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.எஸ்.மகேஸ்வரன் விசாரணை மேற்கொண்டாா். அதில், வாகன சோதனையின்போது போலீஸாா் இதுபோன்ற முறைகேடுகளில் ஈடுபடுவது உறுதியானது.
இதையடுத்து, முறைகேடுகளில் ஈடுபட்ட தொப்பூா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் செல்வபதி (50), தலைமைக் காவலா்கள் வெங்கடேசன் (31), பரதன் (35) ஆகிய 3 பேரையும் பணியிடை நீக்கம் செய்து காவல் கண்காணிப்பாளா் சனிக்கிழமை உத்தரவிட்டாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தொப்பூா் கணவாய் பகுதியில் தற்காலிக சாலைகளை மேம்படுத்தி பாலப் பணிகளை விரைவுபடுத்தக் கோரிக்கை

தொப்பூா் கணவாய் பகுதியில் தடுப்புச் சுவரில் மோதிய லாரி! போக்குவரத்து பாதிப்பு!!

வீட்டு மாடியில் கஞ்சா செடி வளா்த்தவா் கைது

தொப்பூா் அருகே திடீரென லாரி நின்றதால் அடுத்தடுத்து 7 வாகனங்கள் மோதி விபத்து
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



