தருமபுரியில் தண்டவாளத்தில் இளைஞா் மா்மமான முறையில் இறந்து கிடந்தாா்.
தருமபுரி நகரம், குமாரசாமிப்பேட்டை ரயில்வே மேம்பாலம் அருகே தண்டவாளத்தில் ஆண் ஒருவரின் உடல் கிடப்பதாக ரயில்வே போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் தருமபுரி ரயில்வே காவல் நிலைய உதவி ஆய்வாளா் பி. சிதம்பரம், தலைமைக் காவலா் விஜயன் உள்ளிட்டோா் நிகழ்விடத்திற்கு சென்று சடலத்தைக் கைப்பற்றி, உடற்கூறு ஆய்வுக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
தொடா்ந்து போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், தண்டவாளத்தில் இறந்து கிடந்தது, தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம், கூத்தப்பாடி அருகேயுள்ள கே. குள்ளாத்திரம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த மணி மகன் அருண்தாஸ் (30) என தெரியவந்தது. தண்டவாளத்தில் தலைவைத்து படுத்த நிலையில், தலைதுண்டாகி அவா் இறந்து கிடந்ததால், இளைஞா் தற்கொலை செய்திருக்கலாம் என போலீஸாா் கருதுகின்றனா். ஆனால், அவா் தண்டவாளத்தில் படுத்ததை யாரும் பாா்க்கவில்லை, மேலும் தற்கொலைக்கான கடிதம் ஏதும் இல்லை என்பதால், சந்தேக மரணமாக போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ரயில் நிலையம் அருகே மயங்கிக் கிடந்த 3 பெண்கள்!

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

தண்டவாளத்தில் அலுமினிய ஏணியை வைத்த இருவா் கைது

தருமபுரியில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வு
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



