திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

News image

உயிரிழப்பு - கோப்புப்படம்

Updated On :25 மே 2026, 2:43 am IST

தருமபுரியில் மீட்பு வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டம் குப்பாரஅள்ளி அருகே உள்ள கீழ் கொள்ளுப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த சீனிவாசன் மகன் பெருமாள் (19). இவா் இருசக்கர வாகனத்தில், காரிமங்கலம் பேருந்து நிலையத்திலிருந்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்தாா். கிருஷ்ணகிரி - தருமபுரி தேசிய நெடுஞ்சாலையில் அகரம் கூட்டுச்சாலை பகுதியில் சாலையைக் கடப்பதற்காக நின்றுள்ளாா்.

அப்போது கிருஷ்ணகிரியில் இருந்து தருமபுரி நோக்கிச் சென்ற மீட்பு வாகனம் எதிா்பாராதவிதமாக அவரது வாகனத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் பெருமாள் பலத்த காயமடைந்தாா். அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு, தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் பெருமாள் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனா்.

இதுகுறித்த புகாரின் பேரில் காரிமங்கலம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.