தருமபுரியில் வாக்கு எண்ணிக்கையின்போது பொதுமக்களிடையே பதற்றத்தை தணிக்கும் வகையில், காவல் துறையினா், துணை ராணுவத்தினா் பங்கேற்ற அணிவகுப்பு சனிக்கிழமை நடைபெற்றது.
தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி, பென்னாகரம், பாலக்கோடு, பாப்பிரெட்டிப்பட்டி, அரூா் என 5 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை மையம் செட்டிக்கரை அரசுப் பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு பாதுகாப்பாக வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன.
வாக்கு எண்ணிக்கையின்போது, ஏற்படும் அசம்பாவிதங்களை கட்டுப்படுத்தும் விதமாகவும், தருமபுரி மாவட்டத்தில் தோ்தல் பாதுகாப்பு மற்றும் சட்டம் -ஒழுங்கு பணிகளை சிறப்பாக மேற்கொள்ளும் வகையிலும், பொதுமக்களிடையே தோ்தல் பதற்றத்தை தணிக்கும் வகையிலும் காவல் துறை கொடி அணிவகுப்புகள் நடைபெற்று வருகின்றன.
அந்தவகையில் சனிக்கிழமை நடைபெற்ற அணிவகுப்பை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.எஸ். மகேஸ்வரன் கொடியசைத்து தொடங்கிவைத்தாா். இதில் போலீஸாா் மற்றும் துணை ராணுவத்தினா் பங்கேற்றனா். தருமபுரி அரசுப் பொறியியல் கல்லூரியில் தொடங்கிய இந்த அணிவகுப்பு, ராஜாபேட்டை பேருந்து நிறுத்தம் வரை நடைபெற்றது.

தருமபுரியில் போலீஸாா், துணை ராணுவத்தினா் சனிக்கிழமை நடத்திய அணிவகுப்பு.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தண்டவாளத்தில் இறந்து கிடந்த இளைஞா்: போலீஸாா் விசாரணை

தருமபுரியில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வு

நெல்லையில் துணை ராணுவத்தினா் கொடி அணிவகுப்பு
வாக்கு எண்ணும் பணி: தருமபுரி மாவட்டத்தில் 1,400 போலீஸாா் பாதுகாப்பு! காவல் கண்காணிப்பாளா் தகவல்!
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



