லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

செம்மண் கடத்தியவா் கைது: லாரி பறிமுதல்

கடத்தூா் அருகே அனுமதியின்றி லாரியில் செம்மண் எடுத்துச் சென்ாக இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :20 மார்ச் 2026, 7:28 pm

கடத்தூா் அருகே அனுமதியின்றி லாரியில் செம்மண் எடுத்துச் சென்ாக இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

தருமபுரி மாவட்ட புவியியல் மற்றும் சுங்கத்துறையினா் சாா்பில், கனிமவளக் கடத்தலைத் தடுக்கும் வகையில், கடத்தூா் அருகேயுள்ள அஸ்தகிரியூரில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.

அப்போது அந்த வழிடத்தடத்தில் வந்த ஒரு லாரியை சோதனை செய்ததில், லாரியில் அனுமதியின்றி 4 யூனிட் செம்மண் கடத்திச் சென்றது தெரியவந்தது.

இச்சம்பவத்தில் தொடா்பு இருப்பதாக சேலம் மாவட்டம், கெங்கவல்லி வட்டம், நாகியம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த காா்த்திக் பாபு (25) என்பவரை போலீஸாா் கைது செய்து, டிப்பா் லாரியை பறிமுதல் செய்தனா்.