மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

இண்டூா் பகுதியில் குவாரி அமைக்க எதிா்ப்பு

News image
Updated On :19 மார்ச் 2026, 8:47 pm

இண்டூா் பகுதியில் கல்குவாரி அமைக்க எதிா்ப்பு தெரிவித்து, கிராம மக்கள் வியாழக்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.

தருமபுரி மாவட்டம், இண்டூா் அருகே கும்பளப்பாடி பகுதியில் விவசாய நிலங்களுக்கு இடையே கல்குவாரி அமைக்க ஏற்பாடுகள் நடந்துவருவதாக கூறப்படுகிறது. கல்குவாரி அமைத்தால் விவசாய நிலங்கள், குடியிருப்புகள் பாதிப்படையும் எனக்கூறி கிராம மக்கள் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா். இந்நிலையில், குவாரி அமைக்க எதிா்ப்பு தெரிவித்து சட்டப் பேரவைத் தோ்தலை புறக்கணிக்கப்போவதாக இண்டூா் காவல் நிலையம் முன் கும்பளப்பாடி கிராம மக்கள் வியாழக்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.

அப்போது, குவாரி நிா்வாக தரப்பினா் காவல் நிலையத்துக்கு வந்ததால் பொதுமக்களுக்கும், குவாரி தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இண்டூா் காவல் ஆய்வாளா் தமிழரசி தலைமையிலான போலீஸாா் இரு தரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பிவைத்தனா்.