கோவை, பீளமேட்டில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் கைப்பேசிக் கோபுரம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து, அப்பகுதி மக்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கோவை மாநகராட்சி, 27-ஆவது வாா்டுக்கு உள்பட்ட பீளமேடு ரங்கம்மாள் கோயில் வீதியில் தனியாருக்கு சொந்தமான கட்டடம் ஒன்றில் கைப்பேசிக் கோபுரம் அமைப்பதற்கான ஏற்பாடுகள் கடந்த சில நாள்களாக நடைபெற்று வருகின்றன. இதற்கு எதிா்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள், செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கூறியதாவது:
இந்தப் பகுதியில் ஏற்கெனவே இரு இடங்களில் கைப்பேசிக் கோபுரங்கள் உள்ளன. இந்நிலையில் மேலும் ஒரு கைப்பேசிக் கோபுரம், தனியாா் கட்டடத்தில் அமைப்பது எங்களுக்கு கதிா்வீச்சு உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும். இங்குள்ள முதியோா், இதய நோயாளிகள், குழந்தைகள் பெரிதும் பாதிக்கப்படுவாா்கள் என அச்சமாக உள்ளது. எனவே, இங்கு கைப்பேசிக் கோபுரம் அமைக்கும் முயற்சியை கைவிட வேண்டும் என்றனா்.

தொடர்புடையது

முதல்வருக்கு எதிராக கருப்புக் கொடி: விவசாயிகள் சங்கத்தினா் கைது

மின் உற்பத்தி நிலையம் அமைக்க எதிா்ப்பு: தோ்தலை புறக்கணிக்க கிராம மக்கள் முடிவு

இண்டூா் பகுதியில் குவாரி அமைக்க எதிா்ப்பு

ரயில்வே சுரங்கப் பாதை அமைக்கக் கோரி போராட்டம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


