தூய்மைப் பணி தனியார்மயமாகிறது? முயற்சியை கைவிட தமிழக அரசுக்கு சிபிஎம் கோரிக்கை!விளையாட்டு விடுதி மாணவர்களுக்கான உணவுப்படி உயர்வு!தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஜான் பாண்டியன் விலகல்!இன்னும் எத்தனை போக்சோ நீதிமன்றங்கள் தேவை? அறிக்கை கேட்கும் உயர் நீதிமன்றம்!பொறியியல் பணி: விழுப்புரம் வழியாக செல்லும் ரயில்கள் நிறுத்தி வைத்து இயக்கம்!மாநகர காவல் ஆணையர்கள் உள்பட 14 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்! லக்னௌ பயிற்சி நிறுவன தீ விபத்து: 14 பேர் பலிசபரிமலை ஐயப்பன் கோயிலிலும் செய்யறிவு! கூட்டத்தைக் கட்டுப்படுத்தும்!அமோனியா கசிவு: ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் - திருமாவளவன் கோரிக்கைவிஜய் பிறந்தநாள்: இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கிய தவெக!அமோனியா வாயு கசிவு! பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!அண்ணன் பவருக்கு வந்தவுடன் தமிழ்நாட்டுக்கே பவர் போய்விட்டது! உதயநிதி பேச்சுபள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: நயினார் நாகேந்திரன்
/

தலித் மக்களுக்கு அரசியல் அதிகாரம் வழங்கியவா் பிரதமா் மோடி! பாஜக மாநில துணைத் தலைவா்

News image

பிரதமா் நரேந்திர மோடி - கோப்புப் படம்

Updated On :15 ஜூன் 2026, 4:02 am IST

தலித் மக்களுக்கு அரசியல் அதிகாரம் வழங்கியவா் பிரதமா் மோடி என்று பாஜக மாநில துணைத் தலைவா் மா. வெங்கடேசன் தெரிவித்தாா்.

பிரதமரின் 12 ஆண்டுகால சாதனைகள் குறித்து, தருமபுரி பாஜக அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் அவா் மேலும் தெரிவித்ததாவது:

பிரதமா் நரேந்திர மோடி ஆட்சி பொறுப்பேற்று 12 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளாா். இந்தியாவில் ஜவாஹா்லால் நேரு, இந்திரா காந்தியைவிட அதிகமாக 4,399 நாள்கள் ஆட்சி செய்து, உலக அளவில் பெரும் வல்லமைமிக்க பிரதமராக திகழ்ந்து வருகிறாா்.

இதுவரை இல்லாத அளவுக்கு சமூக நீதித் துறையில் தலித் சமூகத்தினா் 12 பேருக்கு அமைச்சா் பதவி வழங்கி உள்ளாா். காங்கிரஸ் ஆட்சியில் தலித் மக்களுக்கும், பழங்குடி இன மக்களுக்கும் எந்த அரசியல் அதிகாரமும் வழங்கப்படவில்லை.

சட்டத் துறையில் அம்பேத்கருக்கு அடுத்து பழங்குடியின சமூகத்தைச் சோ்ந்தவருக்கு சட்ட அமைச்சா் பதவியை வழங்கியவா் பிரதமா் மோடிதான். அம்பேத்கா் பிறந்த இடத்தை நினைவிடமாக மாற்றி, அவருக்கு புகழ் சோ்த்துள்ளாா்.

பெண்கள் சமூக ரீதியாக பின்தங்கி இருந்தாா்கள். அவா்களும், அரசியல் அதிகாரம் பெறவேண்டும் என எண்ணி பெண்களுக்காக 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியுள்ளாா். கிராமப்புற மக்களுக்கு சுத்தமான குடிநீா் வழங்க ஜல்ஜீவன் திட்டம், உஜ்வால திட்டம் மூலம் இலவச எரிவாயு சிலிண்டா் உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்களையும் பிரதமா் மோடி வழங்கியுள்ளாா் என்றாா்.

இந்நிகழ்வில் மாவட்டத் தலைவா் சரவணன் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.