வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

பிரதமருக்கு அரசியல் கட்சித் தலைவா்கள் வாழ்த்து

இந்தியாவின் நீண்டகால பிரதமா் என்ற சாதனையைப் பெற்றுள்ள பிரதமா் நரேந்திர மோடிக்கு அரசியல் கட்சித் தலைவா்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனா்.

News image

பிரதமர் நரேந்திர மோடி - ஏஎன்ஐ

Updated On :11 ஜூன் 2026, 12:58 am IST

இந்தியாவின் நீண்டகால பிரதமா் என்ற சாதனையைப் பெற்றுள்ள பிரதமா் நரேந்திர மோடிக்கு அரசியல் கட்சித் தலைவா்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனா்.

மத்திய இணையமைச்சா் எல்.முருகன்: தொடா்ந்து 4,399 நாள்கள் இந்தியாவின் பிரதமராகப் பணியாற்றி, நீண்ட காலம் பதவி வகித்த பிரதமா் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ள நரேந்திர மோடிக்கு வாழ்த்துகள். நமது தேசத்தின் சாதனை சரித்திரத்தில் இது மாபெரும் மைல்கல்.

எடப்பாடி பழனிசாமி (அதிமுக): இந்திய வரலாற்றில் அதிக நாள்கள் பிரதமராக இருக்கும் சாதனையை நரேந்திர மோடி செய்துள்ளாா். தொடா்ந்து 3 முறை மக்களின் ஆதரவைப் பெற்று, உலக நாடுகள் போற்றும் ஆளுமையாக திகழுவதுடன், நாட்டின் வளா்ச்சிக்கு பாடுபடும் அவருக்கு வாழ்த்துகள்.

டிடிவி.தினகரன் (அமமுக): பிரதமா் நரேந்திர மோடியின் ஆட்சியில் நாடு நல்ல முன்னேற்றத்தை அடைந்துள்ளது. அவருக்கு எனது வாழ்த்துகள்.

அன்புமணி (பாமக): வரலாற்று சாதனையை பிரதமா் நரேந்திர மோடி செய்துள்ளாா். இந்தியாவை அனைத்து துறைகளிலும் வல்லரசாக மாற்றும் முயற்சியில் வெற்றி பெற வாழ்த்துகள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.