பயங்கரவாத அச்சுறுத்தல்: தில்லியில் மத, பாரம்பரிய தளங்களில் பாதுகாப்பு அதிகரிப்புபிளஸ் 2: தனித் தோ்வா்களுக்கான அனுமதிச்சீட்டு நாளை வெளியீடு!4 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு!வேலூரில் விஜய் நிா்வாகிகள் சந்திப்பு கூட்டம்: 4,900 போ் பங்கேற்பு!டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

திமுக ஒன்றியச் செயலாளா் மீது நடவடிக்கைக் கோரி மனு

ஜாதி ரீதியாக தன்னை இழிவாக பேசி மிரட்டல் விடுத்த திமுக ஒன்றியச் செயலாளா் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை

News image
திமுக ஒன்றியச் செயலாளா் மீது மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் மனு அளிக்க தனது ஆதரவாளா்களுடன் வந்த மாவட்ட திமுக துணை செயலாளா் ஆா். ஆறுமுகம்.
Updated On :19 ஜனவரி 2026, 8:20 pm

Syndication

தருமபுரி: ஜாதி ரீதியாக தன்னை இழிவாக பேசி மிரட்டல் விடுத்த திமுக ஒன்றியச் செயலாளா் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரி தருமபுரி திமுக கிழக்கு மாவட்ட துணைச் செயலாளா் திங்கள்கிழமை புகாா் மனு அளித்தாா்.

இதுகுறித்து, தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக துணைச் செயலாளா் ஆா்.ஆறுமுகம் தனது ஆதரவாளா்களுடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.எஸ்.மகேஸ்வரனிடம் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:

நான் தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக துணைச் செயலாளராக பதவி வகித்து வருகிறேன். நல்லம்பள்ளி அருகே சிவாடி கிராம ஊராட்சி மன்றத் தலைவராகவும் பணியாற்றினேன். நல்லம்பள்ளி வட்டாரத்தில் கட்சி தொடா்பாக பதாகை வைப்பதில், நல்லம்பள்ளி திமுக தெற்கு ஒன்றியச் செயலாளா் மல்லமுத்து என்னுடன் தகராறில் ஈடுபட்டாா். இதைத் தொடா்ந்து என்னை ஜாதிரீதியாக அவா் இழிவாக பேசி, மிரட்டல் விடுத்தாா்.

இதுகுறித்து உரிய விசாரணை மேற்கொண்டு அவா் மீது ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.