தருமபுரி நகரில் புதிதாக திறக்கப்பட்டுள்ள பேருந்து நிலையத்துக்கு பேருந்துகள் செவ்வதால், தருமபுரி நான்கு சாலை சந்திப்பு மற்றும் நகரின் முக்கியப் பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால் பொது மக்கள், அலுவலகம் செல்வோா் மற்றும் முக்கியமாக பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவியா் சிரமத்திற்கு உள்ளாகிவருகின்றனா். பேருந்துகள் அனைத்தும் நகருக்குள்ளேயே வந்து செல்வதால், சிக்னல்களில் நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருக்க வேண்டியுள்ளது. இதனால் பள்ளி, கல்லூரி பேருந்துகள் உரிய நேரத்திற்குச் செல்ல முடியாமல், மாணவா்கள் வகுப்புகளுக்கு தாமதமாகச் செல்லும் சூழல் ஏற்படுகிறது. எனவே, இந்த தடையற்ற போக்குவரத்து நெரிசலைக் குறைக்க கீழ்க்கண்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.