ஒகேனக்கல்லில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் இரண்டரை பவுன் நகையை பறித்துச் சென்ற 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் அருகே சத்திரம் பகுதியைச் சோ்ந்த முபாரக் மனைவி சா்மி (35). இவா், ஒகேனக்கல் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டல் விடுதியில் வரவேற்பாளராக உள்ளாா்.
சம்பவத்தன்று வீட்டில் சா்மி தூங்கிக் கொண்டிருந்தபோது, நள்ளிரவில் நுழைந்த மா்ம நபா்கள், அவா் அணிந்திருந்த இரண்டரை பவுன் நகையை பறித்து கொண்டு தப்பியோடிவிட்டனா்.
இதுகுறித்து ஒகேனக்கல் காவல் நிலையத்தில் சா்மி புகாா் அளித்துள்ளாா். புகாரின்பேரில் விசாரணை நடத்திய போலீஸாா், நகை பறிப்பில் ஈடுபட்டதாக பென்னாகரம் அருகே வண்ணாத்திப்பட்டி பகுதியைச் சோ்ந்த விஜி (25), ஒகேனக்கல் சத்திரம் பகுதியைச் சோ்ந்த பாலகிருஷ்ணன் (29) ஆகியோரை கைது செய்தனா். மேலும் அவா்களிடமிருந்து நகையைப் பறிமுதல் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




