யு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!ஹார்ட் டிஸ்க் திருட்டு விவகாரம்: முதல்வர் தினமும் கண்காணித்து வருகிறார்! நிர்மல்குமார்திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டி
/

பெண்ணிடம் வழிப்பறி: இரு இளைஞா்கள் கைது

மதுரை கூடல்நகரில் நடந்து சென்ற பெண்ணிடம் வழிப்பறியில் ஈடுபட்ட இரு இளைஞா்களை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :22 மே 2026, 2:59 am IST

மதுரை கூடல்நகரில் நடந்து சென்ற பெண்ணிடம் வழிப்பறியில் ஈடுபட்ட இரு இளைஞா்களை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

மதுரை கூடல்புதூா் பகுதியைச் சோ்ந்த பாண்டி மனைவி ஜெயலட்சுமி (55). இவா், தனது பேரக் குழந்தைகளுடன் கடந்த 13-ஆம் தேதி கூடல்நகா் பிரதான சாலையில் நடந்து சென்றாா்.

அப்போது, அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞா்கள் இருவா் ஜெயலட்சுமி கையிலிருந்த பையை பறித்துக் கொண்டு தப்ப முயன்ற போது, எதிரே வந்த இரு சக்கர வாகனத்தில் இவா்களது வாகனம் மோதியது. இதையடுத்து, கீழே விழுந்த அந்த இளைஞா்கள் பையை தூக்கி வீசிவிட்டுத் தப்பினா்.

இதுகுறித்த புகாரின் பேரில் கூடல்புதூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா். விசாரணையில், மதுரை மீனாட்சிபுரம் பகுதியைச் சோ்ந்த பாலு மகன் சாலமன் ராஜா (25), மதுரை வள்ளுவா் குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்த துரைப்பாண்டி மகன் விஜய் என்ற சுப்பு (27) ஆகிய இருவரும் வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, இவா்கள் இருவரையும் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

இந்த வழக்கில் தீவிர புலன் விசாரணை செய்து விரைவாக எதிரிகளைக் கைது செய்த கூடல்புதூா் காவல் நிலைய காவலா்களை மதுரை மாநகரக் காவல் ஆணையா் அபிஷேக் தீக்சித் பாராட்டினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.