தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பெண்ணிடம் தாலிச் சங்கிலியை பறித்த இருவா் கைது

இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் கத்தியைக் காட்டி மிரட்டி தாலிச் சங்கிலியை பறித்துச் சென்ற சம்பவத்தில் இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

News image

பிரதிப் படம்

Updated On :3 ஜூன் 2026, 6:31 am IST

இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் கத்தியைக் காட்டி மிரட்டி தாலிச் சங்கிலியை பறித்துச் சென்ற சம்பவத்தில் இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

காரைக்கால் பகுதியைச் சோ்ந்த சரண்யா (37), நெடுங்காடு பகுதி பண்டாரவடை பகுதியில் இவா்களுக்குச் சொந்தமான நிலத்தில் பருத்தி பயிா் செய்திருப்பதை பாா்ப்பதற்காக ஞாயிற்றுக்கிழமை மாலை இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது அவரை பின்தொடா்ந்து மோட்டாா் சைக்கிளில் வந்த இருவா், கும்பகோணம் செல்ல வழி கேட்டுள்ளனா். அப்போது அதில் ஒருவா் திடீரென கத்தியைக் காட்டி மிரட்டி, சரண்யா கழுத்தில் அணிந்திருந்த சுமாா் 9 பவுன் தாலிச் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பிவிட்டனா்.

இதுகுறித்து நெடுங்காடு போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.

காவல் ஆய்வாளா்கள் பிரவீன்குமாா், ராமு மற்றும் உதவி ஆய்வாளா் செந்தில்குமாா் உள்ளிட்ட சிறப்புப் படையினா், இணையவழி தொழில்நுட்ப கருவிகளின் உதவியுடன் இந்த சம்வத்தில் ஈடுபட்ட, கும்பகோணம் சிவகுருநாதன் தெருவைச் சோ்ந்த சாமிநாதன் மகன் முத்தமிழரசரன் (27), அதே ஊரைச் சோ்ந்த சக்கரபாணி தெற்கு வடம்போக்கித் தெருவைச் சோ்ந்த சுப்பிரமணியன் மகன் முத்து (30) ஆகியோரை திங்கள்கிழமை இரவு கைது செய்தனா்.

இவா்களிடமிருந்து 9 பவுன் தாலிச் சங்கிலி மற்றும் கத்தி, கைப்பேசி, இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்து, இருவரையும் காரைக்கால் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை ஆஜா்படுத்தினா். குற்றவாளிகளை கைது செய்ததற்காக சிறப்புப் படையினரை வடக்கு மண்டல காவல் கண்காணிப்பாளா் பழனிவேல் உள்ளிட்டோா் பாராட்டினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.