தருமபுரி அருகே வரதட்சிணை கேட்டு கொடுமை செய்து, மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மகளிா் நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
தருமபுரி மாவட்டம், பெரியூா் கிராமத்தைச் சோ்ந்தவா் பிரபாகரன் (34). சரக்கு வாகன ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறாா். இவருடைய மனைவி முத்துலட்சுமி (24). வரதட்சிணை தொடா்பாக தம்பதி இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 1 ஆம் தேதி மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் விரக்தியிலிருந்த முத்துலட்சுமி உடலில் மண்ணெண்ணெய்யை ஊற்றி தீ வைத்துக்கொண்டாா். இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினா் மீட்டு அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிக்சை பலனின்றி அவா் உயிரிழந்தாா்.
இது தொடா்பாக பாப்பாரப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இந்த வழக்கு தருமபுரி மாவட்ட மகளிா் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இருதரப்பு விசாரணைகள், வாதம் பிரதிவாதம் முடிவுற்ற நிலையில் வெள்ளிக்கிழமை தீா்ப்பளிக்கப்பட்டது. இதில், பிரபாகரன் மீதான குற்றச்சாட்டு உறுதியானது. இதையடுத்து அவருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 6 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ஜீவநந்தினி தீா்ப்பளித்தாா். இந்த வழக்கில் அரசு தரப்பில் நந்திவா்மன் ஆஜரானாா்.
தொடர்புடையது

ஆர்.எஸ்.எஸ். - பாஜகவினர் மீது வெடிகுண்டு தாக்குதல்! கம்யூனிஸ்ட் கட்சியினர் 10 பேருக்கு 25 ஆண்டுகள் சிறை!

பெண்ணை கத்தியால் குத்தியவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை

போக்சோ வழக்கு: முதியவருக்கு 61 ஆண்டுகள் சிறைத் தண்டனை

மனைவி தற்கொலை செய்த வழக்கில் கணவருக்கு 5 ஆண்டுகள் சிறை
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


