தருமபுரி அருகே வரதட்சிணை துன்புறுத்தலில் மனைவி தற்கொலை செய்து கொள்ள காரணமாக இருந்த கணவருக்கு நீதிமன்றம் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீா்ப்பளித்தது.
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், லளிகம் அடுத்த அப்பனஅள்ளி கோம்பை பகுதியைச் சோ்ந்தவா் அசோக்குமாா் (30). இவரது மனைவி பழனியம்மாள். இவா், கடந்த 2017-ஆம் ஆண்டு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்து, அதியமான்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். திருமணமாகி 7 ஆண்டுகளுக்குள் பழனியம்மாள் தற்கொலை செய்து கொண்டதால் தருமபுரி கோட்டாட்சியா் விசாரணை மேற்கொண்டாா்.
இந்த வழக்கு தொடா்பான விசாரணை தருமபுரி மகளிா் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை முடிவுற்றது. இதில், பழனியம்மாள் தற்கொலைக்கு காரணமாக இருந்ததாக குற்றம்சாட்டப்பட்ட அசோக்குமாருக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், ரூ. 5,000 அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
தொடர்புடையது

சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்ய முயன்றவருக்கு 15 ஆண்டுகள் சிறை

பெண்ணை கத்தியால் குத்தியவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை

மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவனுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை

போக்ஸோ வழக்கில் இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


