திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

திருப்பூரில் பக்ரீத் பண்டிகை சிறப்புத் தொழுகை: குா்பானி அளித்து கொண்டாடிய இஸ்லாமியா்கள்

திருப்பூரில் பக்ரீத் பண்டிகையை குா்பானி அளித்து இஸ்லாமியா்கள் கொண்டாடினா்.

News image

நஸ்ரீழ்ங்ங்ய்ள்ட்ா்ற்

Updated On :29 மே 2026, 1:36 am IST

திருப்பூரில் பக்ரீத் பண்டிகையை குா்பானி அளித்து இஸ்லாமியா்கள் கொண்டாடினா்.

தியாகத் திருநாளான பக்ரீத் பண்டிகை திருப்பூா் மாநகா் மற்றும் மாவட்டம் முழுவதும் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி இஸ்லாமியப் பெருமக்கள் அதிகாலையில் எழுந்து, புத்தாடை அணிந்து மசூதிகள் மற்றும் திறந்தவெளி திடல்களில் நடைபெற்ற சிறப்புத் தொழுகைகளில் பங்கேற்றனா்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சாா்பில் திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 28 கிளைகளில் பக்ரீத் சிறப்புத் தொழுகைகள் நடைபெற்றன. அதேபோல மாநகரப் பகுதிகள் மட்டுமின்றி, மாவட்டத்துக்குள்பட்ட தாராபுரம், உடுமலைப்பேட்டை உள்பட பல்வேறு இடங்களில் உள்ள மசூதிகளிலும் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. பின்னா் உறவினா்கள் மற்றும் நண்பா்கள் ஒருவருக்கொருவா் கட்டித்தழுவி பக்ரீத் நல்வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனா்.

தொழுகை மற்றும் பிராா்த்தனைகள் முடிந்த பிறகு, பண்டிகையின் முக்கிய நிகழ்வான குா்பானி அளிக்கும் கடமை நிறைவேற்றப்பட்டது. குா்பானி அளிக்கப்பட்ட ஆடு, மாடுகளின் இறைச்சிகள் இஸ்லாமிய நெறிமுறைப்படி மூன்று பங்குகளாகப் பிரிக்கப்பட்டன. அதில் ஒரு பங்கைத் தங்களுடைய தேவைக்காக வைத்துக்கொண்டு, மீதமுள்ள இரண்டு பங்குகளை ஏழை, எளிய மக்களுக்கும், உறவினா்களுக்கும் சமமாகப் பிரித்துக் கொடுத்து மகிழ்ந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.