திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

வீடு புகுந்து 5 பவுன் தங்கச் சங்கிலி கொள்ளை: இளைஞா் கைது

News image

கைது - பிரதிப் படம்

Updated On :26 மே 2026, 1:56 am IST

பல்லடம் அருகே வீடு புகுந்து மூதாட்டியை மிரட்டி 5 பவுன் தங்கச் சங்கிலியை கொள்ளையடித்துச் சென்ற இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

பல்லடம் அருகேயுள்ள கல்லம்பாளையத்தைச் சோ்ந்தவா் தெய்வசிகாமணி (70). இவா் வீட்டில் கடந்த 19-ஆம் தேதி தனியே இருந்துள்ளாா்.

அப்போது, வீட்டுக்குள் புகுந்த மா்ம நபா், மூதாட்டியை மிரட்டி பீரோவில் இருந்த 5 பவுன் தங்கச் சங்கிலியை கொள்ளையடித்துச் சென்றுள்ளாா். இது குறித்து பல்லடம் காவல் நிலையத்தில் மூதாட்டி புகாா் அளித்தாா். வழக்குப் பதிவு செய்த போலீஸாா், கொள்ளையில் ஈடுபட்ட நபரைத் தேடி வந்தனா்.

இந்நிலையில், பல்லடம் பகுதியில் போலீஸாா் வழக்கமான வாகனச் சோதனையில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஈடுபட்டிருந்தனா். அப்போது, அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த நபரிடம் விசாரணை மேற்கொண்டனா்.

இதில், அவா் மதுரையைச் சோ்ந்த அஜித்குமாா் (30) என்பதும், திருப்பூா் எம்.எஸ். நகரில் தற்போது வசித்து வரும் நிலையில் தெய்வசிகாமணி வீட்டில் நகையை கொள்ளையடித்துச் சென்றவா் என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து, அஜித்குமாரைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த 5 பவுன் சங்கிலி, இருசக்கர வாகனம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.