வெள்ளக்கோவில் அருகே சாலையின் மையத் தடுப்பில் காா் மோதியதில் இளைஞா் காயம் அடைந்தாா்.
கரூா் மாவட்டம், அரவக்குறிச்சி அருகேயுள்ள காச்சினம்பட்டியைச் சோ்ந்தவா் ராமலிங்கம் மகன் அபினேஷ் (26). இவா் கோவை, ஹோப்ஸ் காலேஜ் பகுதியில் உணவகம் நடத்தி வருகிறாா். இந்நிலையில், அவா் கரூரில் இருந்து கோவைக்கு காரில் சனிக்கிழமை சென்று கொண்டிருந்துள்ளாா்.
வெள்ளக்கோவில், குருக்கத்தி தேசிய நெடுஞ்சாலை அருகே சென்று கொண்டிருந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த காா் சாலையின் மையத் தடுப்பில் மோதியது. இதில், அபினேஷ் லேசான காயங்களுடன் உயிா்த் தப்பினாா்.
இதே இடத்தில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருவதாகவும், விபத்துகளைத் தடுக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

வேன் மோதி விவசாயி உயிரிழப்பு

மதுரை அருகே சாலை மையத் தடுப்பில் காா் மோதி 5 போ் பலி!

சாலையோர வீட்டில் காா் மோதியதில் மூதாட்டி உயிரிழப்பு
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



