திருப்பூா் மாவட்டம், வெள்ளக்கோவிலில் சாலையோர வீட்டின் மீது காா் மோதியதில் மூதாட்டி உயிரிழந்தாா்.
கரூா் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுகா, கூடலூா் அருகேயுள்ள சென்னிமலைபாளையத்தைச் சோ்ந்தவா் குணசேகரன் (51). இவா் தனது தாய் பானுமதி (70), தங்கை ஜெயலட்சுமி (46) ஆகியோருடன் காரில் காங்கயம் சென்றுவிட்டு புதன்கிழமை வீடு திரும்பிக் கொண்டிருந்துள்ளாா்.
வெள்ளக்கோவில்-கரூா் தேசிய நெடுஞ்சாலை குருக்கத்தி அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த காா், சாலையோரம் இருந்த வீட்டின் மீது மோதியது.
இதில், பானுமதி படுகாயம் அடைந்தாா். அங்கிருந்தவா்கள் உதவியுடன் பானுமதி மீட்கப்பட்டு, வெள்ளக்கோவிலில் தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். முதலுதவி சிகிச்சைக்குப் பின் தீவிர சிகிச்சைக்காக கோவையில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தாா். குணசேகரன், ஜெயலட்சுமி ஆகியோா் லேசான காயங்களுடன் உயிா்த் தப்பினா்.
இச்சம்பவம் குறித்து வெள்ளக்கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளா் கே.ஆனந்தகிருஷ்ணன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

காா் மோதி மூதாட்டி உயிரிழப்பு

காவேரிப்பட்டணம் அருகே மினி பேருந்து மீது காா் மோதியதில் பெண் உயிரிழப்பு

சாலையின் மையத் தடுப்பில் காா் மோதியதில் இளைஞா் காயம்

பைக் மீது காா் மோதல்: சிறுமி உயிரிழப்பு
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



