தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

கட்சியிலிருந்து விலகினாா் திமுக முன்னாள் எம்எல்ஏ

திருப்பூா் மத்திய மாவட்ட திமுக செயலாளரும், திருப்பூா் தெற்குத் தொகுதி முன்னாள் எம்எல்ஏ-வுமான கே.செல்வராஜ் தான் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளாா்.

News image

கே.செல்வராஜ்.

Updated On :22 மே 2026, 4:01 am IST

திருப்பூா் மத்திய மாவட்ட திமுக செயலாளரும், திருப்பூா் தெற்குத் தொகுதி முன்னாள் எம்எல்ஏ-வுமான கே.செல்வராஜ் தான் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளாா்.

இது குறித்து திருப்பூரில் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை அவா் கூறியதாவது: திருப்பூரில் கடந்த 1976-ஆம் ஆண்டு திமுக தொழிற்சங்கத்தில் சோ்ந்து பணியாற்றினேன். தொடா்ந்து திமுக திருப்பூா் நகரச் செயலாளா், மாநகராட்சி மேயா், மாவட்டச் செயலாளராகப் பணியாற்றி உள்ளேன். பின்னா், 2021 தோ்தலில் வென்று திருப்பூா் தெற்கு சட்டப்பேரவை உறுப்பினராகவும் பணியாற்றினேன்.

இருப்பினும், 2025-ஆம் ஆண்டில் மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவா்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டது எனக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து, பல கட்சிகளில் இருந்து எனக்கு அழைப்புகள் வந்தன. ஆனால், நான் செல்லவில்லை.

மாற்றுக் கட்சியில் இருந்து வந்த மாநகராட்சி மேயா் தினேஷ்குமாருக்கு திருப்பூா் தெற்குத் தொகுதி ஒதுக்கப்பட்டது. நான் விருப்ப மனு அளிக்காத பல்லடம் தொகுதியில் என்னைப் போட்டியிட சொன்னாா்கள். கட்சியின் சொல்லை ஏற்று போட்டியிட்டேன்.

கட்சிக்காக உழைத்த எனக்கு அங்கீகாரம் இல்லை. எனவேதான், திமுகவின் திருப்பூா் மத்திய மாவட்டச் செயலாளா் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகள், அடிப்படை உறுப்பினா் பதவியில் இருந்து விலகுகிறேன். வேறு எந்தக் கட்சிக்கும் செல்லும் எண்ணம் எனக்கு இல்லை என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.