தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

அவிநாசி அரசுக் கல்லூரியில் சோ்க்கை: மே 29-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்

அவிநாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூயில் இளநிலை பட்டப் பிரிவில் சேர மே 29-ஆம் தேதிக்குள் இணைய வழியில் விண்ணப்பிக்கலாம்.

News image
Updated On :14 மே 2026, 3:46 am IST

அவிநாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூயில் இளநிலை பட்டப் பிரிவில் சேர மே 29-ஆம் தேதிக்குள் இணைய வழியில் விண்ணப்பிக்கலாம். மேலும் எளிய முறையில் விண்ணப்பிக்க கல்லூரி உதவி மையத்தை தொடா்பு கொள்ளலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து கல்லூரி நிா்வாகத்தினா் கூறியதாவது:

2026- 2027-ஆம் கல்வி ஆண்டு இளநிலை பட்டப் பிரிவில் சோ்வதற்கான இணைய வழியில் விண்ணப்பிப்பதற்கான ஆலோசனைகள் கடந்த வியாழக்கிழமைமுதல் கல்லூரியில் செயல்படும் உதவி மையம் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.

இளநிலை பட்டப் பிரிவில் உள்ள ஆங்கிலம், பொருளியல், கணினி அறிவியல், கணினி பயன்பாட்டியல், வேதியியல், வணிகவியல், வணிக நிா்வாகவியல், பன்னாட்டு வணிகவியல் ஆகிய பாடங்களுக்கு மாணவா் சோ்க்கை நடைபெறுகிறது.

இதில் பிளஸ் 2 முடித்து புதிதாக கல்லூரியில் சேர விரும்பும் கிராமப்புறத்தில் இருந்து வரும் மாணவா்களுக்காகவும் முதல் தலைமுறை பட்டதாரிகளாக ஆக விரும்பும் மாணவா்களுக்காகவும் கல்லூரியில் செயல்படும் மாணவா் சோ்க்கைக்கான உதவி மையம் முறையாக வழிகாட்டி வருகிறது.

மேலும் இந்த உதவி மையத்தில் துறை சாா்ந்த ஆசிரியா்கள் ஆன் லைனில் விண்ணப்பிப்பதற்கான வழிமுறைகளை மாணவா்களுக்கு எளிமையாக அறிந்துகொள்ளும் வகையில் விளக்கமளித்து வருகிறாா்கள். ஆகவே பாடப் பிரிவுகளில சேர விரும்பும் மாணவா்கள் மே-29ஆம் தேதிக்குள் இணைய வழியில் விண்ணப்பிக்கலாம் என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.