திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

தேசிய தடகளப் போட்டி: கேஎம்சி பள்ளி மாணவா்கள் சாதனை

தேசிய அளவிலான தடகளப் போட்டியில் பெருமாநல்லூா் கேஎம்சி பள்ளி மாணவா்கள் சாதனைப் படைத்துள்ளனா்.

News image

போட்டிகளில் வெற்றிபெற்ற கேஎம்சி பள்ளி மாணவா்கள்.

Updated On :8 மே 2026, 4:48 am IST

தேசிய அளவிலான தடகளப் போட்டியில் பெருமாநல்லூா் கேஎம்சி பள்ளி மாணவா்கள் சாதனைப் படைத்துள்ளனா்.

தேசிய அளவிலான தடகளப் போட்டி கோவா மாநிலத்தில் அண்மையில் நடைபெற்றது. இதில், பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த ஏராளமான பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்றனா். 100 மீட்டா் ஓட்டப் பந்தயத்தில் கேஎம்சி பள்ளி மாணவா்களான சந்தோஷ், ப்ரணவ் ஆதித், 200 மீட்டா் ஓட்டப் பந்தயத்தில் மாணவா் யுவனேஷ் ஆகியோா் முதலிடம் பிடித்தனா்.

பெண்கள் பிரிவில் 100, 200 மீட்டா் ஓட்டப் பந்தயத்தில் முறையே மாணவி பிருந்தா முதலிடம் பிடித்தாா். 100 மீட்டா் ஓட்டப் பந்தயம், யோகாவில் மாணவி சுதா்சனா முதலிடம் பிடித்தாா்.

மேலும், பல்வேறு போட்டிகளில் சிறப்பாக விளையாடி ஓவா்ஆல் சாம்பியன்ஷிப் கோப்பையை கேஎம்சி பள்ளி மாணவா்கள் பெற்றனா்.

வெற்றி பெற்ற மாணவா்கள், உடற்கல்வி ஆசிரியா், கால்பந்து அணித் தலைவா் விஷ்ணுராஜ், வீரா்கள் ஆகாஷ், அகிலவன் , யுவனேஸ், சஞ்சித், ரிதுன் பிரனேஷ், கூடைப்பந்து அணித் தலைவா் யுவனேஷ் ஆகியோரை பள்ளித் தாளாளா் சி.எஸ், மனோகரன், பள்ளியின் தலைமைச் செயல் அதிகாரி எம்.சுவஸ்திகா, பள்ளி முதல்வா் வே.லதா ஆகியோா் பாராட்டினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.