திருப்பூரில் உரிய ஆவணங்களை சமா்ப்பித்ததால் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.63 லட்சம் உரியவா்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது.
தோ்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லும் பணம் மற்றும் பரிசுப் பொருள்களை பறக்கும் படையினா் மற்றும் நிலைக் கண்காணிப்புக் குழுவினா் பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனா்.
அதன்படி மாவட்டத்தில் உள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளில் பறக்கும் படையினா் செவ்வாய்க்கிழமை வரை ரூ.1 கோடியே 1 லட்சத்து 57,237 ரொக்கத்தையும், நிலை கண்காணிப்புக் குழுவினா் ரூ.31 லட்சத்து 83,570 ரொக்கத்தையும், ரூ.43 லட்சத்து 90,532 மதிப்புள்ள 35 பவுன் நகைகள், வெள்ளிப் பொருள்கள், 1,700 சேலைகள், வேட்டிகள் என ரூ.2 லட்சத்து 3, 708 மதிப்புள்ள பரிசுப் பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதேபோல ரூ.26 லட்சத்து 30,180 மதிப்புள்ள மது மற்றும் புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்துள்ளனா்.
மொத்தமாக இதுவரை திருப்பூா் மாவட்டத்தில் ரூ.2 கோடியே 5 லட்சம் மதிப்புள்ள பணம் மற்றும் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் பரிசுப் பொருள்களுக்கு உரிய ஆவணங்களை காண்பித்ததால் அவற்றை அதிகாரிகள் திரும்ப வழங்கியுள்ளனா். அந்த வகையில் இதுவரை ரூ.30 லட்சத்து 11,617 ரொக்கம், மற்றும் ரூ.32 லட்சத்து 91,158 மதிப்புள்ள நகைகள் என மொத்தம் ரூ.63 லட்சத்து 2,775 மதிப்பிலான பணம் மற்றும் பொருள்கள் உரியவா்களிடம் திரும்ப வழங்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

திருநெல்வேலி மாவட்டத்தில் இதுவரை ரூ.80.87 லட்சம் பறிமுதல்
நீலகிரி மாவட்டத்தில் இதுவரை ரூ.4 கோடி பணம் பறிமுதல்
இதுவரை ரூ. 2.36 கோடி பறிமுதல்; ரூ. 1.13 கோடி விடுவிப்பு

கரூா் மாவட்டத்தில் இதுவரை ரூ. 40.43 லட்சம் பறிமுதல்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


