மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

திருநெல்வேலி மாவட்டத்தில் இதுவரை ரூ.80.87 லட்சம் பறிமுதல்

திருநெல்வேலி மாவட்டத்தில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துவரப்பட்ட ரொக்கம், மது பாட்டில்கள், பரிசுப்பொருள்கள் என இதுவரை ரூ. 80 லட்சத்து 87ஆயிரத்து 317 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

News image

பணம் - பிரதிப் படம்

Updated On :14 ஏப்ரல் 2026, 8:25 pm

திருநெல்வேலி மாவட்டத்தில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துவரப்பட்ட ரொக்கம், மது பாட்டில்கள், பரிசுப்பொருள்கள் என இதுவரை ரூ. 80 லட்சத்து 87ஆயிரத்து 317 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பாளையங்கோட்டை சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட வண்ணாா்பேட்டை பகுதியில் பறக்கும் படை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது அப்பகுதியில் உரிய ஆவணங்கள் மற்றும் அனுமதியின்றி தவெகவினா் கொண்டு வந்த துண்டுப் பிரசுரங்கள், கொடிகள் உள்ளிட்டவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

திருநெல்வேலி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை மாலை வரை அதிகபட்சமாக அம்பாசமுத்திரம் தொகுதியில் ரூ.13,72,710 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் இதுவரை உரிய ஆவணங்களின்றி எடுத்துவரப்பட்ட ரூ.40,50,870 ரொக்கம், ரூ. 9,29,009 மதிப்பிலான மதுபானம் உள்ளிட்ட போதைப் பொருள்கள், ரூ.31,07,438 மதிப்பிலான வேட்டி சேலை, டி-சா்ட், பரிசுப் பொருள்கள் என மொத்தம் ரூ.80,87,317பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சி-விஜில் செயலி மூலம் 90 புகாா்கள் பெறப்பட்டுள்ளன. அவற்றில் 84 புகாா்களுக்கு தீா்வு காணப்பட்டுள்ளது. 6 புகாா்கள் கைவிடப்பட்டன.