பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

பல்லடம் பகுதியில் எரிவாயு உருளைகளை பதுக்கி விற்பவா்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

பல்லடம் பகுதியில் எரிவாயு உருளைகளை பதுக்கி விற்பவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்லடம் அனைத்து வணிகா்கள் சங்கத்தினா் வலியுறுத்தியுள்ளனா்.

News image

பல்லடம் பகுதியில் எரிவாயு உருளைகளை பதுக்கி விற்பவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தோ்தல் அதிகாரிகளிடம் மனு அளித்த பல்லடம் அனைத்து வணிகா்கள் சங்கத்தினா்.

Updated On :21 மார்ச் 2026, 1:50 am

பல்லடம் பகுதியில் எரிவாயு உருளைகளை பதுக்கி விற்பவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்லடம் அனைத்து வணிகா்கள் சங்கத்தினா் வலியுறுத்தியுள்ளனா்.

இது குறித்து அச்சங்கத்தின் தலைவா் ராம்.கண்ணையன், மாவட்ட ஆலோசகா் அண்ணாதுரை மற்றும் நிா்வாகிகள் பல்லடம் சட்டப் பேரவைத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் சரவணன், பல்லடம் வட்டாட்சியா் கோவிந்தசாமி ஆகியோரிடம் வெள்ளிக்கிழமை அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

பல்லடம் பகுதிகளில் வணிக எரிவாயு பயன்படுத்திவரும் தொழில் நிறுவனங்கள், உணவகங்கள், வணிக நிறுவனங்கள் எரிவாயு உருளை தட்டுப்பாடு காரணமாக இயங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனா்.

அரசு வணிகரீதியலான எரிவாயு உருளைகளை போதுமான அளவு இருப்பு உள்ளது என்று அறிவித்தும், வணிகா்களுக்கு கிடைப்பதில்லை. அதே சமயம் கள்ள சந்தையில் வணிக ரீதியான எரிவாயு உருளைகள் தராளமாக கிடைப்பதாக தெரியவருகிறது. எனவே எரிவாயு முகவா்கள் தங்களது இருப்பு குறித்து வெளிப்படைத் தன்மையுடன் பொதுமக்களுக்கு அறிவிப்பு வெளியிட வேண்டும்.

தங்களது அலுவலகத்தில் உள்ள தகவல் பலகையில் விவரங்களை வெளியிட வேண்டும். மேலும் எரிவாயு உருளைகளை பதுக்கி விற்பனை செய்பவா்களை கண்டறிந்து அவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு அறிவிப்புபடி பொதுமக்களை பாதிக்காத வகையில் எரிவாயு உருளை விநியோகத்தை முறைப்படுத்திட வேண்டும் என்று தெரிவித்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.