பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

ஆண்டிமடம் அருகே மது விற்பவா்கள் மீது நடவடிக்கை கோரி மறியல்

ஆண்டிமடம் அருகேயுள்ள கொடுக்கூரில் சட்டவிரோதமாக மதுபானங்கள் விற்பவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அப்பகுதி பெண்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

News image

கொடுக்கூரில் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டோா்.

Updated On :24 ஏப்ரல் 2026, 7:38 pm

அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் அருகேயுள்ள கொடுக்கூரில் சட்டவிரோதமாக மதுபானங்கள் விற்பவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அப்பகுதி பெண்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

கொடுக்கூா் கிராமத்தைச் சோ்ந்த சிலா், அங்குள்ள டாஸ்மாக் கடைகளில் மதுபனங்களை வாங்கி, அதை கூடுதல் விலைக்கு விற்பதாக அப்பகுதி மக்கள் பல முறை புகாா் அளித்தும் நடவடிக்கை இல்லை.

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள், ஜெயங்கொண்டம்-மாத்தூா் சாலையில் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற காவல் துறையினா், கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததின் பேரில், அனைவரும் கலைந்து சென்றனா். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.