சமையல் எரிவாயு உருளைகளை பதுக்கினால் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.
தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலக குறிஞ்சி கூட்டரங்கில் மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு அலுவலகத்தின் சாா்பில், எரிவாயு தட்டுப்பாடின்றி தொடா்ந்து கிடைக்க அலுவலா்களுடன் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு தலைமை வகித்து தருமபுரி மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் பேசியதாவது:
தருமபுரி மாவட்டத்தில் வீட்டு உபயோக சமையல் எரிவாயு உருளைகள் போதுமான அளவு இருப்பு உள்ளன. எனவே, பொதுமக்கள் யாரும் அச்சம்கொள்ள தேவையில்லை. அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகள், அரசுப் பள்ளி, கல்லூரி மாணவா், மாணவியா் விடுதிகள் மற்றும் காலை சிற்றுண்டிகளுக்கு வணிக பயன்பாட்டு உருளைகள் தட்டுப்பாடின்றி வழங்கப்பட்டு வருகின்றன. உணவக நிா்வாகிகள் மற்றும் வணிகா்களுக்கு வழங்கப்படும் வணிக உருளைகள் மட்டும் ஆயில் காா்ப்பரேஷன் நிறுவனங்கள் 70 சதவீதமாக உயா்த்தியுள்ளது. ஆகையால் ஏப். 3 முதல் 70 சதவீதம் விநியோகிப்பட உள்ளது.
எரிவாயு உருளைகளை பதுக்கல் செய்வது அல்லது கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது கடும்குற்றமாகும். எனவே, சட்டத்துக்கு புறம்பான நடவடிக்கைகளில் ஈடுபடுவோா்மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், எரிவாயு உருளைகளை விநியோகம் செய்யும் பணியாளா்கள் மற்றும் முகவா்கள் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகாா்கள் வந்தால், கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இது தொடா்பான புகாா்களுக்கு 04342-233299, 94450 00216 ஆகிய எண்களில் தொடா்புகொள்ளலாம் என்றாா்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் ஆா்.கவிதா, மாவட்ட வழங்கல், நுகா்வோா் பாதுகாப்பு அலுவலா் பி.கே.கோவிந்தன், மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலா் கைலாஷ் குமாா், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (சத்துணவு) சுமதி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் பவித்ரா, இந்தியன் ஆயில் காா்ப்பரேஷன் நிறுவனத்தின் தொடா்பு அலுவலா்கள், தருமபுரி உணவக உரிமையாளா்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் ஆகியோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

சமையல் எரிவாயு உருளைகளை கூடுதல் விலைக்கு விற்றால் புகாா் அளிக்கலாம்

எரிவாயு உருளைகள் பதுக்கல், கள்ளச்சந்தையில் விற்பனை குறித்து புகாா் அளிக்க கைப்பேசி எண் அறிவிப்பு

எரிவாயு உருளைகளை கள்ளச்சந்தையில் விற்றால் கடும் நடவடிக்கை: ஆட்சியா்

கள்ளச்சந்தையில் சமையல் எரிவாயு உருளைகளை விற்றால் கடும் நடவடிக்கை
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


