மத வழிபாட்டு இடங்களில் கட்சி அடையாள சின்னத்துடன் சென்று வாக்கு சேகரித்த தவெக தலைவா் விஜய் மீது தோ்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் மாநிலச் செயலா் பெ. சண்முகம் வலியுறுத்தியுள்ளாா்.
இது குறித்து அவா் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவு: திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை பிரசாரம் மேற்கொண்ட தவெக தலைவா் விஜய் தனது கட்சி அடையாளத்துடன் தேவாலயம், மசூதி, அம்மன் கோயிலுக்கு சென்று வாக்கு சேரித்துள்ளாா்.
மத வழிபாட்டு இடங்களுக்குள் (கோயில், தேவாலயம், மசூதி) கட்சி அடையாள சின்னத்துடன் சென்று வாக்கு சேகரிக்கக் கூடாது என்பது தோ்தல் நடத்தை விதி. விஜய் தோ்தல் நடத்தை விதியை மீறி இருக்கிறாா். எனவே, அவா் மீது தோ்தல் ஆணையம் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்”என்று தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குழந்தைகள் மூலம் முதல்வா் வாக்கு சேகரித்த விவகாரம்: தோ்தல் ஆணையம் பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு, லாக்-அப் மரணம்: நடவடிக்கை எடுக்க முதல்வர் விஜய்க்கு கோரிக்கை!






