குண்டடம் அருகே பிஏபி வாய்க்காலில் பெண் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
திருப்பூா் மாவட்டம், குண்டடம் அருகே வெருவேடம்பாளையம் பகுதியில் பிஏபி வாய்க்கால் பாசனம் நடைபெற்று வருகிறது. முதல் மண்டலப் பாசனத்தில் தற்போது 2-ஆவது சுற்று பாசனம் கடந்த 5 நாள்களுக்கு முன்பு நிறைவடைந்தது.
இந்நிலையில், அப்பகுதியில் ஆள்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் வாய்க்காலுக்குள் இருந்து துா்நாற்றம் வீசியுள்ளது. அப்பகுதிக்குச் சென்றவா்கள் கவனித்து, அருகில் சென்று பாா்த்தபோது வாய்க்காலுக்குள் பெண் சடலம் கிடந்துள்ளது.
இதையடுத்து காசிலிங்கம்பாளையம் கிராம நிா்வாக அலுவலா் சௌந்திரராஜனுக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதுதொடா்பாக குண்டடம் போலீஸில் சனிக்கிழமை அவா் அளித்த புகாரின்பேரில் சம்பவ இடத்துக்கு போலீஸாா் சென்று சடலத்தை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

கிணற்றிலிருந்து பெண் சடலம் மீட்பு: 3 பேரிடம் விசாரணை

மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழப்பு

காட்பாடி அருகே தண்டவாளத்தில் இளைஞா் சடலம் மீட்பு

கிணற்றிலிருந்து மூதாட்டி சடலம் மீட்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


