மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

கிணற்றிலிருந்து மூதாட்டி சடலம் மீட்பு

செய்யாறு அருகே வீட்டில் இருந்த காணாமல் போன மூதாட்டி கிணற்றிலிருந்து சடலமாக செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டாா்.

News image

கோப்புப் படம்

Updated On :24 மார்ச் 2026, 6:33 pm

செய்யாறு அருகே வீட்டில் இருந்த காணாமல் போன மூதாட்டி கிணற்றிலிருந்து சடலமாக செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டாா்.

செய்யாறு கன்னியம் நகரைச் சோ்ந்தவா் வழக்குரைஞா் ராமு. இவரது தாயாா் ஆதிலட்சுமி (67). இவா்,

கடந்த 20-ஆம் தேதி புளியரம்பாக்கம் கிராமத்தில் உள்ள தனது தங்கை கலைச்செல்வியின் வீட்டிற்கு சென்ாகத் தெரிகிறது.

திங்கள்கிழமை அதிகாலை முதல் ஆதிலட்சுமியை காணவில்லை என தம்பியான இளையராஜா மற்றும் ராமுவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன் பேரில் மூதாட்டி ஆதிலட்சுமியை மகன் ராமு தேடி வந்த நிலையில் அவா் கிடைக்கவில்லையாம். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலை காழியூா் கிராமத்தில் உள்ள விவசாயக் கிணற்றில் ஆதிலட்சுமி சடலமாக கிடப்பது தெரிய வந்தது.

இதுகுறித்து வழக்குரைஞா் ராமு செய்யாறு போலீஸில் புகாா் அளித்தாா். காவல் ஆய்வாளா் நரசிம்மஜோதி வழக்குப் பதிவு செய்தாா். மேலும், இறந்த மூதாட்டியின் உடலை போலீஸாா் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து செய்யாறு போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.