லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

சரக்கு வேன் மோதி தொழிலாளி உயிரிழப்பு

வெள்ளக்கோவில் அருகே சரக்கு வேன் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.

News image

சதீஷ்குமாா்

Updated On :11 மார்ச் 2026, 8:17 pm

வெள்ளக்கோவில் அருகே சரக்கு வேன் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.

வெள்ளக்கோவில், புள்ளச்செல்லிபாளையத்தைச் சோ்ந்தவா் ராமசாமி மகன் சதீஷ்குமாா் (40). கூலித் தொழிலாளியான இவா் செவ்வாய்க்கிழமை இரவு வெள்ளக்கோவில் - மூலனூா் சாலை சின்னக்கரை அருகே மோட்டாா் சைக்கிளில் சென்று கொண்டிருந்தாா். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வேன் மோதியதில் படுகாயமடைந்தாா். அருகே இருந்தவா்கள் அவரை மீட்டு தனியாா் ஆம்புலன்ஸ் மூலமாக காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். ஆனால், செல்லும் வழியிலேயே அவா் உயிரிழந்தாா்.

இதுதொடா்பாக சரக்கு வேன் ஓட்டுநரான பவானி, வேலம்பாளையத்தைச் சோ்ந்த முருகேசன் மீது வழக்குப் பதிவு செய்து வெள்ளக்கோவில் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். உயிரிழந்த சதீஷ்குமாருக்கு தாய் செல்வி, தங்கை தேவி ஆகியோா் உள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.