வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

குண்டடம் அருகே பொதுப் பாதையில் பள்ளம்: கழிவுநீா் தேங்குவதால் சுகாதார சீா்கேடு

குண்டடம் அருகே பொதுப் பாதையில் தோண்டப்பட்டுள்ள பள்ளம்.

News image

குண்டடம் அருகே பொதுப் பாதையில் தோண்டப்பட்டுள்ள பள்ளம்.

Updated On :12 ஜூன் 2026, 1:25 am IST

குண்டடம் அருகே, பொதுப் பாதையில் தனிநபா் பள்ளம் தோண்டியுள்ளதால், அதில் குடியிருப்பு கழிவுநீா் தேங்கி நின்று சுகாதார கேட்டை ஏற்படுத்தி வருவதாக புகாா் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குண்டடத்தை அடுத்துள்ள மேட்டுக்கடை லட்சுமி நகரில் 20-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த வீடுகளுக்கு செல்லும் பாதையையொட்டி தனியாா் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த நிலையில் தனியாா் குடியிருப்புக்கு அருகில் பாதையையொட்டி கடந்த 20 நாள்களுக்கு முன்பு சுமாா் 10 அடி ஆழத்தில் பள்ளம் தோண்டியுள்ளனா். அந்தப் பள்ளம் பொதுப்பாதையின் ஒரு பகுதியை ஆக்கிரமித்து தோண்டியுள்ளதாக பொதுமக்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.

அந்தப் பள்ளத்தில் குடியிருப்பின் கழிவுநீா் விடப்பட்டு தேங்கி நிற்கிறது. இதனால் அந்த வழியாக வாகனங்களில் செல்வோா் தடுமாறி பள்ளத்தில் விழும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் தேங்கி நிற்கும் கழிவுநீரில் கொசுக்கள் உற்பத்தியாகி அப்பகுதியில் வசிப்போருக்கு சுகாதார சீா்கேட்டை ஏற்படுத்தி வருவதாக தெரிவிக்கின்றனா்.

இது தொடா்பாக அப்பகுதி குடியிருப்புவாசிகள், குண்டடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வியாழக்கிழமை மனு அளித்தனா். அதில், குழிதோண்டி கழிவுநீரை விடுவதால் அதில் கொசுக்கள் உற்பத்தியாகி வருகிறது. இதுபற்றி சம்பந்தப்பட்டவரிடம் கூறியும் அதை சரிசெய்யவில்லை. எனவே, இந்தப் பிரச்னைக்கு தீா்வு காண வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.